நான் எந்தகட்சியையும் சாராதவன் என்கிற தலத்தில் இருந்தும் பலவருடங்களாக தமிழக அரசியல் களத்தை மிக உன்னிப்பாக பின்தொடருபவன் என்கிற ரீதியில் இந்த பதிவில் வைகோவை பற்றி எழுதுகிறேன். இதை இப்போது எழுதவேண்டிய கட்டாயம் ஒரு நண்பரால் ஏற்பட்டது, அவர் இங்கிலாந்தில் பொறியியல் பட்ட மேற்படிப்பு படித்து எதையும் அறிவுபூர்வமாக அணுகக்கூடிய ஒரு பண்பாளர் ஆனால் இன்றோ வைகோ என்பவரை தலைவராக ஏற்றதால் அவர் எடுக்கும் அரசியல் நிலைபாடுகளை இணைத்தில் மிக மூர்க்கமாக ஆதரித்து எழுதுவது மட்டுமல்லாது எதிர்கருத்து கொண்டவர்களை பொத்தாம்பொதுவாக ஏசிக்கொண்டு இருப்பதால் என் நிலைப்பாட்டில் வைகோவை பற்றி எனக்கு தெரிந்தவைகளை எழுதுகிறேன். ஒரு தலைவன் எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு வரவேற்பு தெரிவிப்பதும் சமூகத்திற்கு ஒவ்வாத முடிவுகளை எடுககுமபோது எதிர்த்து கேள்வி கேட்பவேனே தொண்டன், அனைத்தையும் ஆதரிப்பவன் ஒரு அடிமை.
தமிழர்கள் ஆட்சி புரியவேண்டிய தமிழர் நிலத்தில் ஒரு வடவனை அழைத்துவந்து அவன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு மற்றவர்களுக்கான இட பங்கீட்டை அறிவிக்க தங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்று அவன் அறிவிப்புக்காக மேடையில் உட்கார்ந்து இருந்த காட்சியை பார்த்து இந்த கோமாளி இனி எந்த காலத்திலும் பெரியாரின் பெயரை கூட உச்சரிக்க அருகதை அற்றவர் என்கிற முடிவுக்கு வந்தேன். இவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் இவர் பின் திரண்ட ஒரு பெரும்கூட்டமும், திமுக, அதிமுகவுக்கு பிறகு அமைப்பு ரீதியாக அனைத்து ஊர்களிலும் வியாபித்த ஒரு கட்சி மதிமுக, இன்றைய தேமுதிக போல 8% ஒட்டு வங்கி வைத்திருந்த கட்சியின் இன்றைய நிலை? தன்னுடைய தனி சின்னத்தையே தக்கவைத்துகொள்ள தள்ளாடுகிறது. இவர் இப்படி போராடி சீட்டுவாங்கி வெற்றி பெற்று என்ன கிழிக்கபோகிறார் என்றால் ஒன்றுமில்லை அதற்கான உதாரணம் 1999 ஆண்டு 4 பாராளுமன்ற இடங்களை பெற்ற இவரால் என்ன செய்ய முடிந்தது? செஞ்சி ராமச்சந்திரன் அமைச்சர் ஆக்கினார் ஆனால் அவரோ ஊழல் குற்றசாட்டில் பதவி இழந்தார். இவர்கள் அமைச்சரவையில் பங்கேற்ற அந்த காலகட்டத்தில்தான் புலிகள் ஓயாத அலைகள் 3 படை நடவடிக்கையில் ஆனையிறவை கைப்பற்றி பல்லாயிரக்கணக்கான இலங்கை இராணுவ வீரர்களை சிறை பிடித்தனர் ஆனால் இவர்கள் பங்கேற்ற பாரதிய சனதா கட்சி புலிகளை மிரட்டி முன்னேறும் படைநடவடிக்கையை தடுத்தனர். அந்த காலகட்டத்தில்தான் இலங்கைக்கு அதிவிரைவு படகுகளையும், இராணுவ தளவாடங்களையும் இந்தியா கொடுத்தது.
எந்த ஜெயலலிதாவை எதிர்த்து தமிழகத்தில் இரண்டுமுறை நடைபயணம் செய்தாரோ அவருடன் கூட்டு சேர்ந்தது முதல் கோமாளித்தனம், எந்த கட்சியால் பழிசுமத்தப்பட்டு வெளியேற்றப்பட்டாரோ அந்த திமுகவுடன் கூட்டணி சேர்ந்தது அடுத்த கோமாளித்தனம், மறுபடியும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து அவரின் கொள்கை பரப்பு செயலாளர் போல் செயல்பட்டது அடுத்த கோமாளித்தனம், இலவு காத்த கிளிபோல் காத்திருந்த போது எங்கிருந்தோ வந்த கோமாளி விஜயகாந்துக்கு நிறைய இடங்கள் ஒதுக்கியதால் அந்த தேர்தலையே புறக்கணித்தது அடுத்த கோமாளித்தனம், 2009 ஆண்டு தமிழகத்தில் எழுந்த ஈழ எழுச்சியில் முத்துக்குமார் இறப்பின் போது இப்போது இவர்கள் சேர்ந்திருக்கும் கூட்டணி இயல்பாகவே உருவாகியிருக்கும் அது ஒரு மாற்று சக்தியாக உருவாகி இருந்திருக்கும் ஆனால் காலத்தை கணிக்க தெரியமால் இவர் ஜெயலலிதாவின் பின் சென்று தெருவில் நின்ற நிலை மற்றொரு கோமாளித்தனம், எந்த அழகிரியை எதிர்த்தாரோ அவரை கட்டிபிடித்து நின்றதை பார்த்தபோது கோமாளியை விட சந்தர்ப்பவாதியாக குட்டு வெளிப்பட்டு போனார். பேச்சிலும் செயலிலும் சிரிப்பிலும் எப்போது ஒரு நாடக தன்மை வெளிப்படும் அதை தமிழக மக்கள் நன்றாக உணர்ந்துகொண்டார்கள், எத்தனைதான் சிறந்த மக்கள் நல போரட்டங்களை முன்னெடுத்து இருந்தாலும் என்றுமே வெற்றி பெறமுடியாத மற்றுமொரு திமுகவை நடத்தும் வைகோ என்னும் கோமாளி.....
தமிழர்கள் ஆட்சி புரியவேண்டிய தமிழர் நிலத்தில் ஒரு வடவனை அழைத்துவந்து அவன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு மற்றவர்களுக்கான இட பங்கீட்டை அறிவிக்க தங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்று அவன் அறிவிப்புக்காக மேடையில் உட்கார்ந்து இருந்த காட்சியை பார்த்து இந்த கோமாளி இனி எந்த காலத்திலும் பெரியாரின் பெயரை கூட உச்சரிக்க அருகதை அற்றவர் என்கிற முடிவுக்கு வந்தேன். இவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் இவர் பின் திரண்ட ஒரு பெரும்கூட்டமும், திமுக, அதிமுகவுக்கு பிறகு அமைப்பு ரீதியாக அனைத்து ஊர்களிலும் வியாபித்த ஒரு கட்சி மதிமுக, இன்றைய தேமுதிக போல 8% ஒட்டு வங்கி வைத்திருந்த கட்சியின் இன்றைய நிலை? தன்னுடைய தனி சின்னத்தையே தக்கவைத்துகொள்ள தள்ளாடுகிறது. இவர் இப்படி போராடி சீட்டுவாங்கி வெற்றி பெற்று என்ன கிழிக்கபோகிறார் என்றால் ஒன்றுமில்லை அதற்கான உதாரணம் 1999 ஆண்டு 4 பாராளுமன்ற இடங்களை பெற்ற இவரால் என்ன செய்ய முடிந்தது? செஞ்சி ராமச்சந்திரன் அமைச்சர் ஆக்கினார் ஆனால் அவரோ ஊழல் குற்றசாட்டில் பதவி இழந்தார். இவர்கள் அமைச்சரவையில் பங்கேற்ற அந்த காலகட்டத்தில்தான் புலிகள் ஓயாத அலைகள் 3 படை நடவடிக்கையில் ஆனையிறவை கைப்பற்றி பல்லாயிரக்கணக்கான இலங்கை இராணுவ வீரர்களை சிறை பிடித்தனர் ஆனால் இவர்கள் பங்கேற்ற பாரதிய சனதா கட்சி புலிகளை மிரட்டி முன்னேறும் படைநடவடிக்கையை தடுத்தனர். அந்த காலகட்டத்தில்தான் இலங்கைக்கு அதிவிரைவு படகுகளையும், இராணுவ தளவாடங்களையும் இந்தியா கொடுத்தது.
எந்த ஜெயலலிதாவை எதிர்த்து தமிழகத்தில் இரண்டுமுறை நடைபயணம் செய்தாரோ அவருடன் கூட்டு சேர்ந்தது முதல் கோமாளித்தனம், எந்த கட்சியால் பழிசுமத்தப்பட்டு வெளியேற்றப்பட்டாரோ அந்த திமுகவுடன் கூட்டணி சேர்ந்தது அடுத்த கோமாளித்தனம், மறுபடியும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து அவரின் கொள்கை பரப்பு செயலாளர் போல் செயல்பட்டது அடுத்த கோமாளித்தனம், இலவு காத்த கிளிபோல் காத்திருந்த போது எங்கிருந்தோ வந்த கோமாளி விஜயகாந்துக்கு நிறைய இடங்கள் ஒதுக்கியதால் அந்த தேர்தலையே புறக்கணித்தது அடுத்த கோமாளித்தனம், 2009 ஆண்டு தமிழகத்தில் எழுந்த ஈழ எழுச்சியில் முத்துக்குமார் இறப்பின் போது இப்போது இவர்கள் சேர்ந்திருக்கும் கூட்டணி இயல்பாகவே உருவாகியிருக்கும் அது ஒரு மாற்று சக்தியாக உருவாகி இருந்திருக்கும் ஆனால் காலத்தை கணிக்க தெரியமால் இவர் ஜெயலலிதாவின் பின் சென்று தெருவில் நின்ற நிலை மற்றொரு கோமாளித்தனம், எந்த அழகிரியை எதிர்த்தாரோ அவரை கட்டிபிடித்து நின்றதை பார்த்தபோது கோமாளியை விட சந்தர்ப்பவாதியாக குட்டு வெளிப்பட்டு போனார். பேச்சிலும் செயலிலும் சிரிப்பிலும் எப்போது ஒரு நாடக தன்மை வெளிப்படும் அதை தமிழக மக்கள் நன்றாக உணர்ந்துகொண்டார்கள், எத்தனைதான் சிறந்த மக்கள் நல போரட்டங்களை முன்னெடுத்து இருந்தாலும் என்றுமே வெற்றி பெறமுடியாத மற்றுமொரு திமுகவை நடத்தும் வைகோ என்னும் கோமாளி.....